Over Eswariye Mahamayi
மகமாயி மாரியம்மா என்ற பாடலைப் பாடலாசிரியர் எம் தனசீலன் எழுதியுள்ளார்.
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
மனதில் எண்ணி வந்த வரத்தை எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
ஆயிரம் கண்கள் படைத்தவளே (உடையவளே) எங்களைக் கண் நோக்கிப் பார் அம்மா.
உன்னை அன்றி வேறு கதி ஏது அம்மா.
இருக்கும் சமயபுரம் சன்னதியின் வாசலிலே
சங்கரியே உன்னை நினைத்து உருகி நின்றோம் உன்னுடைய பூசையிலே.
உள்ளம் கொண்ட தெய்வமாக நீ இருப்பாய்.
உன்னைக் கொண்டாடி வந்ததற்குப் பலன் கொடுப்பாய்.
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
வேண்டுவோர்க்கு வாழ்வு எல்லாம் நலம் தருவாய்.
சிங்கம் பூட்டிய வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்.
ஊர் வாழ நீ மழையாக வடிவம் எடுப்பாய்.
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்.
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
மனதில் எண்ணி வந்த வரத்தை எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
எல்லையிலே நீ குடி இருப்பாய்.
உள்ள அனைத்து நல்ல பத்தினிகளின் தாலி மஞ்சளுக்குத் துணை இருப்பாய்.
மங்களங்கள் பெருக வேண்டும் வந்தோம் உன்னுடைய சக்தியிலே.
குங்குமமாய் நீ தர வேண்டும் எங்கள் நெற்றியிலே.
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
ஆயிரம் கண்கள் படைத்தவளே (உடையவளே) எங்களைக் கண் நோக்கிப் பார் அம்மா.
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
What's new in the latest Eswariye-ey
Eswariye Mahamayi APK -informatie

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!